“மகாகனி’சிறந்த மருந்து
6:16 PM // 0 comments // Balapiti Aroos // Category: helth //இன்று உலகையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் முக்கியமானது சர்க்கரை நோய். மனித உறுப்புக்களின் செயல்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து, இறுதியில் மரணத்தில் தள்ளும் தன்மை கொண்டது இந்த நோய். சித்த வைத்தியத்தில் சர்க்கரை நோய்க்கு மருந்துகள் உள்ளன. வெந்தயம், சுண்டை, பாகல், வேம்பு, நிலவேம்பு போன்ற பல மூலிகைகள் சர்க்கரையை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டவை. இந்த வகையில், மகாகனி மூலிகையும் சர்க்கரை நோய்க்கு பயன்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள அடர்ந்த பசுமை காடுகளில் இந்த அரிய மூலிகை காணப்படுகிறது. மிக, மிக கசப்பு மற்றும் துவர்ப்பு தன்மை கொண்ட மகாகனியின் பட்டை, உலர்ந்த பழத்தோல் ஆகியவை “தேன்காய்’ என்ற பெயரில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த விற்பனை செய்யப்படுகின்றன. இதிலுள்ள பேராக்மலின் லிமனாய்டுகள் ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகின்றன. மகாகனியின் பட்டை, பழத்தோல் ஆகியவற்றை 10 கிராம் அளவில் எடுத்து, 500 மி.லி., நீரில் போட்டு, கொதிக்க வைக்க வேண்டும். அது, 125 மி.லி., அளவிற்கு சுண்டிய பின், தொடர்ந்து குடித்து வர சர்க்கரை அளவு குறையும். மகாகனி பட்டையை இடித்து, பொடித்து, சலித்து 500 மி.கி., அளவிற்கு தினமும் இரண்டு வேளை உணவுக்கு முன்போ, பின்போ சாப்பிட்டு நீர் அருந்தலாம். மருந்துகள் உட்கொள்ளும் போது சர்க்கரை அளவு மிக குறைந்து, குறை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மகாகனி ஒரு மாமருந்து.
Related posts :
0 comments for this post
Leave a reply
- 2008 - 2009 SimplexDesign. Content in my blog is licensed under a Creative Commons License.
- SimplexPro template designed by Simplex Design.
- Premium Wordpress Themes | Website Templates | Blogger Template .