சவுதி அரேபியாவிற்கு சட்டவிரோதமான முறையில் செல்லவிருந்த 20 பணிப்பெண்கள் கைது
5:47 AM // 0 comments // Balapiti Aroos // Category: WORLD NEWS //இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் ஒன்றின் ஊடாக சட்டவிரோதமான முறையில் சவுதி அரேபியாவிற்கு செல்லமுனைந்த 20 மடகாஸ்கார் பணிப்பெண்கள்
காவல்துறையினரால் இடைமறிக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையினரால் இடைமறிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் ஒன்றின் மடகாஸ்கார் கிளை ஒன்றின் ஊடாகவே, இவர்களை குறித்த இடத்திற்கு எடுத்துச் செல்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
குறித்த முகவர் நிறுவன கிளையின் நடவடிக்கைகள் தொடர்பாக மடகாஸ்கார் அரசினால் தற்சமயம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பணிப்பெண்களின் ஆவணங்கள் உட்பட்ட விடயங்களை இலங்கை முகவர் நிறுவன கிளையினர் பூரணப்படுத்தியிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டுப்பணிப்பெண்களை வெளிநாட்டில் பணியில் ஈடுபடுத்தும் போது மடகாஸ்காரின் பொது சேவை அமைச்சுடன் ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்படவேண்டியது அவசியமாகும்,
எனினும், குறித்த இலங்கை முகவர் நிறுவனத்தின் கிளை குறித்த நிபந்தனையை நிறைவேற்றவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, குறித்த 20 பணிப்பெண்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி பணிப்பெண் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு 50 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வரை முகவர் நிறுவனத்தினால் அறவிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
எனினும், பணிப்பெண்களுக்கு மாதாந்தம் 240 அமெரிக்க டொலர்கள் மாத்திரமே ஊதியமாக கிடைப்பதாகவும், மடகாஸ்கார் சனத்தொகை சேவைகள் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
(சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2011, 08:54.04 AM GMT)
குறித்த முகவர் நிறுவன கிளையின் நடவடிக்கைகள் தொடர்பாக மடகாஸ்கார் அரசினால் தற்சமயம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பணிப்பெண்களின் ஆவணங்கள் உட்பட்ட விடயங்களை இலங்கை முகவர் நிறுவன கிளையினர் பூரணப்படுத்தியிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டுப்பணிப்பெண்களை வெளிநாட்டில் பணியில் ஈடுபடுத்தும் போது மடகாஸ்காரின் பொது சேவை அமைச்சுடன் ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்படவேண்டியது அவசியமாகும்,
எனினும், குறித்த இலங்கை முகவர் நிறுவனத்தின் கிளை குறித்த நிபந்தனையை நிறைவேற்றவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, குறித்த 20 பணிப்பெண்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி பணிப்பெண் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு 50 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வரை முகவர் நிறுவனத்தினால் அறவிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
எனினும், பணிப்பெண்களுக்கு மாதாந்தம் 240 அமெரிக்க டொலர்கள் மாத்திரமே ஊதியமாக கிடைப்பதாகவும், மடகாஸ்கார் சனத்தொகை சேவைகள் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
(சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2011, 08:54.04 AM GMT)
Related posts :
0 comments for this post
Leave a reply
- 2008 - 2009 SimplexDesign. Content in my blog is licensed under a Creative Commons License.
- SimplexPro template designed by Simplex Design.
- Premium Wordpress Themes | Website Templates | Blogger Template .